2023/2024 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்கான முதலாவது கலந்துரையாடல் இன்று எமது பிரதேசசபை தலைமையலுவலகத்தில் இடம்பெற்றது. சபையின் செயலாளரின் தலைமையில் பி.ப 2.00 மணிக்கு ஆரம்பமாகிய மேற்படி கலந்துரையாடலில் பொதுமக்கள், பொது அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், விவசாய அமைப்புகள் மற்றும் இளைஞர் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தமது கருத்துக்களை வழங்கினர்.


